13 08 2021

TNBudget2021 Tamil News: தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் வரும் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், இந்த வேலை திட்டத்திற்கு தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்.
ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்: ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்”
குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்
கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்; ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்
காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்; ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்
இவ்வாறு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.