செவ்வாய், 27 ஜூன், 2023

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு திமுக கடிதம்!

 27 6 23

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. 
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தை, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஞானதிரவியத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்  கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் – கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும்  தலைமைக் கழகத்திற்கு புகார் வந்துள்ளது.
இச் செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும் – செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/runelveli-na%e1%b9%ada%e1%b8%b7uma%e1%b9%89%e1%b9%9fa-u%e1%b9%9fuppi%e1%b9%89ari%e1%b9%adam-vi%e1%b8%b7akkam-ke%e1%b9%ad%e1%b9%adu-timuka-ka%e1%b9%aditam-tirunelveli-na%e1%b9%ada%e1%b8%b7uma%e1%b9%89.html