திங்கள், 28 ஆகஸ்ட், 2023

பள்ளிகளில் சாதிய மோதல்: நீதிபதி சந்துரு குழுவுக்கு புதிய உத்தரவு

 A report has been ordered to be submitted within 6 months regarding caste conflict in schools

முன்னாள் நீதிபதி சந்துரு

தமிழ்நாட்டில் தற்போது சாதிய மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதன உச்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்.
இது மாநிலம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி முடிவதற்குள் திருவண்ணாமலையில் மற்றுமொரு சம்பவம் நடந்தது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல்: நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழு முதலமைச்சரின் அறிவிப்பாணையை செயல்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தற்போது குழு 147 கச்சேரி சாலை, மயிலாப்பூர் சென்னை 4 என்ற முகவரியில் தொடர்ந்து இயங்க உள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/a-report-has-been-ordered-to-be-submitted-within-6-months-regarding-caste-conflict-in-schools-744683/