திங்கள், 17 ஜூன், 2024

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு! – 150 பசுக்கள் கையகப்படுத்தப்பட்டன!

 

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி காவல்துறையினரால் இடிக்கப்பட்டன.

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நைன்பூரில் உள்ள பைன்வாஹி பகுதியில் இறைச்சிக்காக அதிகளவில் மாடுகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மாண்ட்லா பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜத் சக்லேச்சா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

“காவல்துறையினர் இந்த பகுதிக்கு விரைந்தபோது வீடுகளின் பின்புறத்தில் 150 பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன், 11 குற்றவாளிகளின் வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்த மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளோம். மேலும் ஒரு அறையிலிருந்து மாட்டின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகளையும் கைப்பற்றினோம்.

பிடிபட்டவை அனைத்தும் மாட்டு இறைச்சி என்று உள்ளூர் அரசு கால்நடை மருத்துவர் மூலம் உறுதி செய்தோம். இரண்டாம் கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்காக மாதிரிகளை ஹைதரபாத்துக்கு அனுப்பியுள்ளோம். மேலும், குற்றவாளிகள் 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால் அவை அனைத்தும் இடிக்கப்பட்டன. பிடிபட்ட 150 பசுக்களும் கால்நடை காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த வெள்ளி (ஜூன் 14) இரவு பசுக்கள் மற்றும் இறைச்சியைக் கைப்பற்றிய பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே பிடிபட்டதால் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/demolition-of-houses-of-11-people-who-had-beef-in-madhya-pradesh-rescue-150-cows.html

Related Posts:

  • அல்லாஹூ அக்பர்... கவிதா கதீஜாவாக... அல்லாஹூ அக்பர்... தூய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள ஒரு பெண்மனி எந்த அளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்.. ஆனால் , இஸ்லாத்திலே இருந்து கொ… Read More
  • தொப்பை குறைய எளிய பயிற்சி...!!! முதலில் விரிப்பின் மீது கால்கள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து நீட்டிப் படுத்துக் கொள்ளவும். கால்களுக்குப் பக்கத்தில் கைகள் இரண்டையும் தரைய… Read More
  • இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... இதுவாடா மார்க்கம் மூடர்களே.....இதை ஒழிக்கத்தானே நபி ஸல் அவர்கள் பாடுபட்டார்கள்.......இஸ்லாத்தை விளங்க மாட்டீர்களா....... (function(d, s, id) { var j… Read More
  • A/C அறையில் சிறுநீரக கோளாறு !!! நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDN… Read More
  • கேன்சரை தடுக்க உதவும் பழங்கள் திராட்சை, திராட்சை பழ ரசம் இரண்டிலும், ‘ரெஸ்வெரட்டோல்’ எனப்படும், ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ அதிக அளவில் உள்ளது. இது செல்கள், திசுக்களில் ஏற்படும் ச… Read More