இந்துத்துவ வெறியோடு சேர்ந்துக் கொண்ட மாநில வெறி..!
மதவெறியோடு சேர்ந்துக் கொண்ட மாநில வெறி..!
‘மராட்டியர்கள் அல்லாதோரின் ஆட்டோக்களை கொளுத்துங்கள்’
மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மாநிலத்தில் புதிதாக வழங்கப்படும் ஆட்டோ உரிமத்தில் 70% மராட்டியர் அல்லாதவர்களுக்கு அளிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.
எனவே, மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு தம் கட்சியினரை அவர் கேட்டு கொண்டார்.
அவ்வாறு எரிக்கும் போது, ஆட்டோவில் உள்ளவர்களை கீழே இறக்கிவிட்டு விடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மண்ணின் மைந்தர்களுக்கே ஆட்டோ உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிறார், ராஜ்தாக்கரே.