சனி, 22 ஏப்ரல், 2017

சசிகலா இனி கவலைப்பட மாட்டார்.. துணைக்கு தினகரனும் சிறை செல்வார்..ராஜா ..!! இப்ப புரியுதா யார் சதிதிட்டம் போட்றதுன்னு !!

சசிகலா இனி கவலைப்பட மாட்டார், அவருக்கு துணையாக தினகரனும் சிறை செல்வார் என்று பாஜக எம்பி எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பத்திரிக்கையளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை சென்றுள்ளார்.
அவருக்கு துணையாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிறை செல்வார்.
புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்த்தால், செயல்படுத்தப்படாது.
நெடுவாசலில் மக்களை போராட்டத்திற்கு பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுகின்றன. இவ்வாறு கூறினார்.

http://kaalaimalar.net/dinakaran-also-will-go-to-jail-says-h-raja/