வியாழன், 20 ஜூலை, 2017

இந்திய வீரர்களின் மண்டையை குழப்பும் சீனா: உளவியல் ரீதியாக உருத்தெரியாமல் ஆக்க, சீனா எடுக்கும் நூதன உத்தி..!

.!
இந்தியா,பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் இணையும் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் கடந்த 6 வாரங்களுக்கு முன்பு  சாலை அமைக்கும் பணியை சீனா கையிலெடுத்தது.
ஏற்கனவே நடந்த சீனா போரின் போது அசால்டாக விட்ட இந்திய ராணுவம் இந்த முறை சுதாரித்து கொண்டு அப்பணியை தடுத்து நிறுத்தியது.
இதனால் சீன ராணுவ இந்திய இராணுவத்தின் மீது கடும் அடக்கு முறையை கையாண்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இரு நாட்டு எல்லைகளிலும் அந்தந்த நாடுகளை சேர்ந்த இராணுவ  வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து எல்லையில் நிலை நிறுத்தப்பட்ட வீரர்களை திரும்ப பெற வேண்டும் என்று இரு நாட்டு ராணுவத்தினரும் கோரி வருகின்றனர்.
இந்திய ராணுவத்தை திரும்ப பெறவில்லை எனில் அவர்கள் விரட்டியடிக்கப்படுவர் என்றும் சீனா எச்சரிக்கை விடுத்தது.
எச்சரிக்கை விடுத்தாலும் அசர மாண்டிங்குதே இந்தியா என்று ஆடிப்போய்விட்டது.
இவர்களை ஆயுதத்தால் அடித்தால் வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கொண்ட சீனா, உளவியல் ரீதியாக இந்தியர்களின் வலிமையை குறைக்க முயற்சி செய்து வருகின்றது.
அதன்படி, எல்லையில் போர் ஒத்திகை பார்ப்பதை போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் இந்திய வீரர்கள் மனதளவில் பாதிப்பு அடைந்து விடுவார்கள். அதன் பின்னர் தாக்குதல் நடத்தினால் எளிதில் அடித்து விடலாம் என்று திட்டம் திட்டி உள்ளது.
http://kaalaimalar.in/chinas-new-trick-to-beat-india/