செவ்வாய், 4 ஜூலை, 2017

தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிப்பு! July 03, 2017

தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிப்பு!


தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கேபிள் மூலம் வழங்கப்படும் அனலாக் சேவையை நிறுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அரசுகேபிள் தொலைக்காட்சி நிறுவனம், டிஜிட்டல் உரிமத்துக்கு விண்ணப்பித்தது. 

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு மத்திய அரசு, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது.  இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், அனைவருக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். முன்னதாக, மானியகோரிக்கை மீதான விவாதத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் 15 நிறுவனங்கள் தங்கள் பணிகள் துவங்க ஆணை வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.