சனி, 16 செப்டம்பர், 2017

கைது செய்யப்பட்ட தமிழர்களை அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதாகப் புகார்! September 16, 2017


கைது செய்யப்பட்ட தமிழர்களை அரைநிர்வாணமாக்கி சித்ரவதை செய்வதாகப் புகார்!

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக 23 தமிழர்களை கைது செய்துள்ள போலீசார், அரை நிர்வாணத்துடன் குறுகிய சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் இருந்து கடப்பா நோக்கி 3 பேருந்துகளில் சென்ற 23 தமிழர்களை கடந்த 13ம் தேதி கோடூர் போலீசார் கைது செய்தனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டு 3 தினங்கள் ஆகியும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த ஒரு குற்றவாளியையும் கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் இல்லாததால், 23 தமிழர்களையும் அரை நிர்வாணத்தில், குறுகிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு உரிய நடடிக்கை எடுத்து சித்ரவதை செய்யப்படும் தமிழர்களை மீட்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts:

  • மறந்து விடாதீர்கள், மோடிக்கு குழி பறிக்கும் சங்பரிவாரம்...?ஹிந்துத்துவாவின் மோடியை மதசார்பற்ற நாட்டின் ஆட்சியில் அமரச் செய்வதற்காக ஒவ்வொரு நாட்களாக விரலை விட்டு எண்ணிக்க… Read More
  • சாவு மணி அடிக்க வேண்டும் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன… Read More
  • Summer Camp மு பட்டி - TNTJ நடத்தும் கோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம் . பயிற்ச்சி தொடங்கும் நாள் 19/04/2014, மணி 10 முதல் 2 வரை. தொடர்புக்கு 994202586… Read More
  • MKpatti- Library Inner View of Library ...Near to Senkulam Bus Top. … Read More
  • அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...! ஏகஇறைவனின் திருப்பெயரால்...சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்… Read More