Home »
» ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அரசுதரப்பில் திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள 10,000 கோடி ரூபாய் February 26, 2018
சரியான தகவல்கள் அளிக்கப்படாததால், ஜிஎஸ்டி-க்காக கூடுதலாக செலுத்தப்பட்ட 10,000 கோடி ரூபாயை திருப்பி அளிக்க முடியா நிலை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் திருத்தப்பட்டதை அடுத்து, கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு அவற்றைத் திருப்பி அளிக்க அரசு முன்வந்தது. இது தொடர்பாக அரசுக்கு உரிய ஆவணங்களை அளித்து, கூடுதல் வரிக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்றுமதி நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டது. எனினும், ஏற்றுமதி நிறுவனங்கள் அளித்த ஆவணங்களில், தவறான தகவல்கள் இருப்பதால், அவற்றை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே, கூடுதல் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. முறையான ஆவணங்கள் அளிக்கப்படாததால், திருப்பி அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் 70 சதவீதம் அப்படியே உள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு 10,000 கோடி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Related Posts:
முதன்முதலாக விண்வெளி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட ஜப்பானிய தொழிலதிபர்! September 21, 2018
ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் யாசகு மேசாவா (Yusaku Maezawa) என்பவரை முதன்முறையாக நிலவுக்கு அழைத்து செல்ல Space X நிறுவனம் முடிவு செய்துள்ள… Read More
தமிழகத்தில் MLA-க்கள், MP-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் திறப்பு! September 20, 2018
தமிழகத்தில், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக… Read More
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள்! September 20, 2018
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்… Read More
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.1350 கோடிக்கு அடமானம் வைத்த தனியார் நிறுவனம்! September 19, 2018
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை அடமானம் வைத்து தனியார் நிறுவனம், ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்கக்கோரி,… Read More
லஞ்சப் புகாரில் கைதான RTO அதிகாரி வங்கி லாக்கர்களில் 9 கிலோ தங்கம் பறிமுதல்! September 20, 2018
கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில், 9 கிலோ தங்கம் இருந்தது குறித்து லஞ்சம் … Read More