புதன், 21 பிப்ரவரி, 2018

​ஆசிரியையை டேட்டிங்குக்கு அழைத்த 8ஆம் வகுப்பு மாணவர்! February 21, 2018

Image

ஆசிரியை மற்றும் அவரது மகளையும் பாலியல் வண்புணர்வு செய்துவிடுவதாக மாணவர் ஒருவர் மிரட்டியுள்ளார். மற்றொரு மாணவர் ஆசிரியையை டேட்டிங்குக்கு அழைத்துள்ள சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராம், டெல்லிக்கு அருகில் உள்ள நகராகும், இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய வகுப்பு ஆசிரியையே பாலியல் ரீதியாக மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பள்ளியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், சமூக வலைத்தளம் மூலமாக ஆசிரியையும், அவரின் மகளையும் பாலியல் வண்புணர்வு செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆசிரியையின் மகள் அதே பள்ளியில் எச்சரிக்கை விடுத்த பள்ளி மாணவருடன் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்திற்கு முன்னதாக நடைபெற்ற இந்த சம்பவத்திலிருந்து மீளாத ஆசிரியையின் மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக அவர் இன்னும் வகுப்புக்கு திரும்பவில்லை. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியையை டேட்டிங் மற்றும் பாலியல் உறவுக்கும் அழைத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அம்மாணவர்கள் தற்போது பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் ஒழுக்கத்திற்கு பள்ளி மட்டும் அல்லாது பெற்றோர்களும் பொறுப்பானவர்கள் என்பதால் தம்முடைய குழந்தைகளை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.