செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சூடுபிடிக்கத்தொடங்கிய பதநீர் விற்பனை! February 27, 2018

Image

நெல்லை - வள்ளியூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.  

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மருத்துவ குணம் கொண்ட பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது. 

கோடை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையியில் நெல்லை சுற்றுவட்டாரத்தில் பனை மரங்களில் இருந்து எடுக்கப்படும் பதநீர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

பதநீர் குடிப்பதால் கோடை கால நோய்கள் நெருங்காது. உடல் சூடு தணிந்து குளிர்ச்சி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லிட்டர் பதநீர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.