புதன், 28 பிப்ரவரி, 2018

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ! February 28, 2018

Image

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து விசாரணை மேற்கொண்ட டெல்லி சிபிஐ அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர். விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் சென்னையில் இருந்து டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்.

கடந்த திங்கட்கிழமை கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை விமான நிலையத்திலேயே வைத்து கார்த்தி சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விதிகளை மீறி ஐ.என்.எக்ஸ் மீடியா முதலீட்டிற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.