Home »
» ராஜஸ்தான் மாநில இடைத்தேர்தலில் தோல்வியடைந்த ஆளும் பாஜக! February 1, 2018
ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள 3 நாடாளுமன்ற, 2 சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஆள்வார், அஜ்மீர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மண்டல்கர் சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த 29ம் தேதியன்று இடைதேர்தல் நடைபெற்றது. அதே போன்று மேற்கு வங்கத்தில் உள்ள நோயபரா சட்டமன்ற தொகுதிக்கும், உலுபெரியா நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைதேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தானின் மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 12,976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அது போன்று அஜ்மீர் மற்றும் ஆழ்வார் நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதைப்போல மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள Noapara சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 63,018 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அது போன்று Uluberia நாடாளுமன்ற தொகுதியிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதையடுத்து, இடைத்தேர்தலில் ஆளும் பாஜக அரசு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Posts:
சுருளும் வகையிலான புதிய தொலைக்காட்சி அறிமுகம்! January 09, 2019
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகைரில் நடைபெற்று வரும், உலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் பொருள் கண்காட்சியில், சுருளும் வகையிலான புதிய தொலைக்காட்ச… Read More
கோடநாடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தினால் முதல்வர் குற்றவாளி ஆவது உறுதி!- ஆ.ராசா January 12, 2019
கோடநாடு விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்த நிலையில் முறையான விசாரணை நடத… Read More
“தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் வர முடியாது!”- கன்னட சலுவாலிக்கட்சி தலைவர் மிரட்டல்! January 13, 2019
source ns7.tv
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. காவிரியின் கு… Read More
கொசுக்களுக்கு 'குடும்ப கட்டுப்பாடு' முயற்சி...இனியாவது குறையுமா கொசுத்தொல்லை? January 13, 2019
source ns7.tv
உலகில் உள்ள பல கோடி மக்களில் பெரும்பாலானோர் கொசுக்களால் ஏற்படும் மலேரியா, டெங்கு, சிகா போன்ற நோய்தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த பிர… Read More
கூலித் தொழிலாளியின் மகன் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வு...! January 13, 2019
source ns7.tv
கூலித் தொழிலாளியின் மகன் ஒருவர் உயிர்காக்கும் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியதால், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளா… Read More