Home »
» சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை; குடியரசுத் தலைவர் ஒப்புதல்! April 22, 2018
12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.போக்சோ சட்டத்தின்படி, 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் முழுவதும் சிறையிலேயே அடைத்து வைக்க சட்டத்தில் இடமுள்ளது. காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, மத்திய அமைச்சரவை போக்சோ சட்டத்தில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதேபோல், 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தினாலும், மரண தண்டனை விதிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த பாஜக நிர்வாகி! October 2, 2018
கோவையில் கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஆலாந்து… Read More
புதுச்சேரி ஆளுநர் - அதிமுக எம்எல்ஏ இடையே மோதல்! October 2, 2018
புதுச்சேரி நிகழ்ச்சியில் மேடையிலேயே துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபர… Read More
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் - திமுக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டம் October 3, 2018
காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, திருவாரூரில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடு… Read More
விடுதலையானதும் முதல் வேலையாக பெரியார், அம்பேத்கார் சிலைகளுக்கு மாலை அணிவித்த திருமுருகன் காந்தி! October 2, 2018
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 52 நாட்கள் சிறை வாசத்துக்கு பின்னர், வேலூர் சிற… Read More
இந்து மதம் குறித்து பேசிய கிறிஸ்தவ மத போதகர் ‘மோகன் சி லாசரஸ்’ மீது வழக்குப் பதிவு! October 3, 2018
இந்து மதம் குறித்து கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோ காட்சிகள் பரவியதால், கோவை மாவட்டத்தில் மூன்று காவல் நிலையங்களில் அவர் மீது இரு … Read More