திங்கள், 30 ஏப்ரல், 2018

கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது! April 30, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கல்லணையில் பரப்புரை பயணத்தை தொடங்கிய வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார். 

கர்நாடகாவுக்கு மின் விநியோகத்தை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை கல்லணையில் இருந்து நெய்வேலி வரை, பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு நிறுவனர் முத்துலட்சுமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில் பரப்புரை பயணத்தை தொடங்குவதற்காக கல்லணைக்கு முத்துலட்சுமி உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், முத்துலட்சுமி மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தடை மீறி பரப்புரை மேற்கொள்ள முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.