சனி, 21 ஏப்ரல், 2018

​FIR பதிவு செய்வதற்கு பீட்சா கேட்ட பெண் எஸ்.ஐ! April 21, 2018

Image

உத்தரபிரதேச மாநிலத்தில் புகார் அளிக்க வந்தவரிடம் பீட்சா வாங்கித் தரச்சொன்ன பெண் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அம்மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் மருத்துவமனை மீது ஒருவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது FIR பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு பீட்சா வாங்கி தர வேண்டும் என அந்த காவல் நிலையத்தில் உள்ள பெண் உதவி ஆய்வாளர் வற்புறுத்தியுள்ளார். 

இதனால் அந்த நபர் இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணையில் இதனை உறுதி செய்த அதிகாரிகள், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.