வெள்ளி, 20 ஏப்ரல், 2018

உச்சநீதிமன்றத்தின் இணையதளம் முடங்கியது! April 19, 2018

Image

உச்சநீதிமன்றத்தின் இணையதள பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு பின்னால், பிரேஸில் நாட்டை சேர்ந்தவரகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று(19.04.2018) மதியம் ஒரு மணி அளவில், உச்சநீதிமன்ற இணையதள பக்கம் முடக்கப்பட்டு, அந்த இணையதளத்தில், இலை போன்ற வடிவில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிரெஞ்ச் மொழியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கிறது.

பாதுகாப்புத்துறையின் இணையதள பக்கங்கள் முடக்கப்பட்ட சில நாட்களில் உச்சநீதிமன்றத்தின் இணையப்பக்கம் முடக்கப்பட்டது, அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் இணையதள  பக்கமும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.