திங்கள், 23 ஏப்ரல், 2018

மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்! April 23, 2018

Image

கொல்கத்தாவில் 4-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகள் இருவரை மிரட்டி, வகுப்பு ஆசிரியரே பாலியல்  வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த தினாஜ் மாவட்டத்தில் உள்ளது ராய்காஞ்ச் பகுதி. இங்குள்ள பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு பயின்ற மாணவிகள் இருவரை, பள்ளி ஆசிரியர் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பள்ளி நேரம் முடிந்து மற்ற மாணவிகள் சென்றபிறகு, இவர்களை மிரட்டி பாலியல் உறவுக்கு ஈடுபடுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக பள்ளி செல்ல முடியாது எனக்கூறி மாணவிகள் கதறி அழுதுள்ளனர். மாணவிகளிடம் உறவினர்கள் விசாரித்ததில் ஒரு மாணவி உண்மையை கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

பரிசோதனையில் சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர் .