செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஓட்டுக் கொட்டகையில் இயங்கும் பள்ளி- புதிய கட்டடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்கள் மனு

 

27 2 23

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி பாதுகாப்பற்ற நிலையால் உள்ளதால் புதிய கட்டடம் கோரி பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் அருகே உள்ள வைத்தூரில்
ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுக் கொட்டகையில் செயல்பட்டு வருகிறது . 

இந்தப் பள்ளியில் 151 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில்
படிக்கும் மாணவர்களின் வருகைப் பதிவேடு , கணினி உபகரணங்கள் மற்றும் முக்கிய
ஆவணங்கள் அனைத்தும் பள்ளியின் கட்டிடத்தில் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.


எனவே ஓட்டுக் கொட்டகையில் இயங்கி வரும் பள்ளி பாதுகாப்பான சூழல் இன்றியும் , ஓடுகளில் விரிசல் ஏற்பட்டும் உள்ளதால் மழைக்காலங்களில் சுற்று சுவர்களில் ஊரல் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ள   கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டுப் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் ,பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அழித்துள்ளனர்.

ஆர்.வீரம்மாதேவி

source https://news7tamil.live/a-school-running-in-a-shed-parents-petition-for-construction-of-a-new-building.html