செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

 13 2 2023

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
05.02.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களையும், முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்று கொண்டார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும், திமுக அமைப்புச்செயலாளர்கள்,மாநிலங்களவை உறுப்பினர் R.S.பாரதி மற்றும் T.K.S. இளங்கோவன் அவர்களும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார் மேம்பாட்டு பிரிவு தலைவர் மற்றும் திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் ஹாஜா அவர்களும் உடனிருந்தனர்
மாநில தலைவர் எம்.எஸ். சுலைமான் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் ஆர். அப்துல் கரீம் அவர்கள், மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் அவர்கள், மாநில துனைத் தலைவர் இ. பாரூக் அவர்கள், மாநில செயலாளர் ஐ. அன்சாரி அவர்கள், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.