ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய 27 வங்கி அதிகாரிகள்-இப்படித்தான் கருப்பு பணத்தை ஒளிப்பார்களோ?

கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவியதாக பொதுத்துறை வங்கி அதிகாரிகள் 27 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய நிதிய மைச்சகம் நேற்று உறுதி செய்தது.
நாடு முழுவதும் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து தொழில் அதிபர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை குறுக்கு வழியில் மாற்ற முயன்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.
அண்மையில் சென்னை பெசன்ட் நகரில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி கிளை மேலாளர் லோகேஷ்வர ராவ், ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் முகேஷ் உள்ளிட்ட 5 பேர் கமிஷன் தொகை பெறுவதற்காக தொழில் அதிபர்களின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள கறுப்புப் பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளை இரு தொழிலதிபர்களிடம் இருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆந்திராவின் ஏலூரில் ரூ.19 லட்சமும் கிருஷ்ணா மாவட்டம் பெத்தனபல்லியில் ரூ.18 லட்சமும், திருப்பதியில் ரூ.1.5 கோடியும் என புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன.
money_jpg_1601895f
தெலங்கானாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஹைதராபாத்தின் ஹிமாயத் நகரில் ரூ.94 லட்சமும், மேதக்கில் ரூ.10 லட்சமும் பிடிபட்டன. இவை அனைத்தும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டு களாக இருந்தன. இது தொடர்பாக இரு மாநிலங்களிலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதே போல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகள் வழங்கிய வங்கி மேலாளர் மற்றும் காசாளரை போலீஸார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் நடந்த இந்த மோசடிகளைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகளை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கறுப்புப் பணத்தை வெள்ளை யாக மாற்ற உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டது.
பல்வேறு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 அதிகாரிகள் வேறு பதவி களுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நேர்மையான பணப் பரிவர்த்தனை நடப்பதற் கான அனைத்து நடவடிக்கை களும் முழுவீச்சில் முடுக்கிவிடப் பட்டுள்ளன. எந்த வகையிலும் மோசடி பணப் பரிமாற்றத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தகைய மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: