ஜல்லிக்கட்டுப்பிரச்னை முடிவுக்கு வராததால், 22ம் தேதி முதல்வர் பன்னீர் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில் முதல்வர் பன்னீர்செல்வம் போலீஸ் அதிகாரிகளிடம் பேசும்போது, மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் வந்துவிடாமல் இந்த பிரச்னையை டீல் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
சசிகலாவை முதல்வர் சந்தித்த போது கூட சசிகலாவும் இதே கருத்தை தான் வலியுறுத்தியிருக்கிறார். இத்தனை நாள் பொறுத்திருந்தோமே இன்னும் ஒரு நாள் பார்க்கலாம். ஆனாலும், இது மாணவர்கள் பிரச்னை. வெடித்து பூதாகரமாகிவிடும் என்று சசிகலாவும் எச்சரிக்கை தெரிவித்திருந்தாராம்.
போலீசாரும் அன்று இரவு முழுவதும் அமைதியாகவே இருந்துள்ளனர்.
போலீசாரும் அன்று இரவு முழுவதும் அமைதியாகவே இருந்துள்ளனர்.
ஆனால், அன்று அதிகாலை எல்லா போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் உயரதிகாரி, மாணவர்களை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்றுங்கள் என்ற உத்தரவு.
எல்லா போலீஸ் அதிகாரிகளுமே இதை ஷாக் நியூசாகத்தான் பார்த்திருக்கிறார்கள். உத்தரவு பிறப்பித்த உயரதிகாரியிடம் சில போலீஸ் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அந்த போலீஸ் உயரதிகாரி, இது மேலிடத்து உத்தரவு என்று பொத்தாம் பொதுவாய் சொன்னாராம்.
யார் அந்த மேலிடம் என்பது தான் தற்போதைய மெரினா மணல் எண்ணிக்கை கேள்வி? முதல்வருக்கு அப்பாற்பட்டு போலீஸ் அதிகாரிகளை இயக்கிய அதிகார மையம் எது?
இதற்கும் மாணவர் படை போராட்டம் நடத்தித்தான் கண்டுபிடிக்க வேண்டுமோ?
http://kaalaimalar.net/whose-ordered/