
நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளன.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவான இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும் கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு உள்ளதால், அவர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
மொத்தம் 99 சதவீத வாக்குகள் பதிவான இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும் கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு 60 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு உள்ளதால், அவர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.