சனி, 23 டிசம்பர், 2017

ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்ததில் 30 பேர் உயிரிழப்பு! December 23, 2017

Image

ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் சவோய் மதாப்பூரில் லால்சாத் கோட்டா நெடுஞ்ச்சாலையில் பனாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் வேகமாக சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான மற்ற பயணிகளை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.