வியாழன், 28 டிசம்பர், 2017

30 மடங்கு வரி விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்! December 28, 2017

Image
சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30 மடங்கு அதிக வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு ஸ்ரீநகர், கங்கா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மிக அதிக அளவு வரி விதித்து நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 100க்கும் மேற்பட்டோர், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கும், நகராட்சி ஆணையர் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.