புதன், 27 டிசம்பர், 2017

​20 ரூபாய் நோட்டைக் காண்பித்து பணம் கேட்ட வாக்காளர்கள் மீது தினகரன் ஆட்கள் தாக்குதல்! December 26, 2017

Image

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் தருமாறு கேட்ட மூன்று பேரை தாக்கிய தினகரன் ஆதரவாளர்கள் நால்வரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி மீனாம்பாள் நகர் பகுதியில் உள்ள தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டர் என்பவரின் வீட்டில், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த மூன்று பேர் 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பணம் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஜான்பீட்டர் தரப்பினர் அந்த மூன்று பேரையும் தாக்கியுள்ளனர்.