திங்கள், 25 டிசம்பர், 2017

​தேவாரம் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானை - வனத்துறை எச்சரிக்கை! December 25, 2017

Image


தேவாரம் அருகே வனப்பகுதியில் ஒற்றை மக்னா யானை நடமாடி வருவதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவாரம் வனப்பகுதியில் ஒரு கால் ஊனமான ஒற்றை மக்னா யானை, கடந்த சில நாட்களாக சுற்றித் திரிகிறது. 
இந்த யானையிடம் சிக்கி கடந்த சில மாதங்களில், 8 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

விவசாயிகளை பீதியடையச் செய்யும் இந்த மக்னா யானை தேவாரம் பகுதியில் முகாமிட்டு அங்குள்ள பயிர்களை சேதப்படுத்திவருகிறது. 

யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் தோட்டத்திற்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இரவில் தோட்டத்திற்கு செல்லும்போது கவனமாக இருக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.