வியாழன், 28 டிசம்பர், 2017

​பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - கோயில் அர்ச்சகருக்கு தர்ம அடி! December 27, 2017

Image

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி, கோயில் அர்ச்சகரை பெண்கள் கட்டையால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த கோயில் அர்ச்சகர் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பெண்கள் அந்த அர்ச்சகரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், அர்ச்சகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.