வெள்ளி, 29 டிசம்பர், 2017

​சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்! December 29, 2017

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன், இன்று பதவியேற்றார். 

ஜெயலலிதா மறைவையடுத்து, அவரின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட டிடிவி.தினகரனுக்கு தலைமைச்செயலகத்தில் இன்று பதவியேற்பு விழா நடந்தது, டிடிவி தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு நிகழ்வின்போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

டிடிவி தினகரன் பதவியேற்பை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சமாதி முதல் தமிழக சட்டப்பேரவை வரையில் டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.