சனி, 30 டிசம்பர், 2017

புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு December 30, 2017

Image

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் கேளிக்கைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விண்ணப்பித்து சிறப்பு உரிமம் பெற வேண்டும் என்றும், நள்ளிரவு 1 மணியுடன் மதுபான விருந்து மற்றும் கேளிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுதிக்கு வரும் வாகனங்களை கேளிக்கை நிகழ்ச்சிகள் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யவேண்டும் என்றும், விடுதி நீச்சல் குளங்களை டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் மூடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும்  நீச்சல் குளத்தின் மீதோ, அனுமதி பெறாத இடங்களின் மீதோ மேடை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்தியவர்களை அந்தந்த விடுதிகளே, அவர்களின் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், விடுதிக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போலீஸ் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.