ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!

ரஜினிகாந்த் அரசியல்  வரப்போவதாக தனது படம் வெளியிடும் நேரமெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரம் தேடிக்கொள்வர். சிலவருடங்களாகவே, தன ரசியர்களை சந்திப்பதும், ஆலோசனை கூட்டம் நடத்துவதும், புகைப்படம் எடுப்பதும், இருந்தநிலையில். சமீபத்தில் சிலவருடம் முன்பு பிரதமர் மோடியை சந்தித்தார், இது எதார்த்தமான , மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும். இந்த சந்திப்போ அரசியல் உல் நோக்கம் கொண்டது என்று, அரசியல் ஆர்வலர்களும், கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக , 31/12/2017 - அன்று ரசிகர்கள் மத்தியில், தான் அரசியல் அறிவிப்பை , ரசிகர்கள் மத்தியில் இன்று அறிவித்தார், மேலும் அந்த அறிவைப்பில் .
1. சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி!” : ரஜினிகாந்த்
2.சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக ரஜினி அறிவிப்பு!
3.போதிய நேரம் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இல்லை என ரஜினி அறிவிப்பு
4. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 3 ஆண்டுகளில் பதவி விலகுவோம் என ரஜினி அறிவிப்பு

இதில் கூறிய அறிவிப்பில் , எதைப்பற்றியும் விரிவான விளக்கம் தரவில்லை.
 இந்தஅறிவிப்பில் ( .சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு ஆன்மிக அரசியலை கொண்டு வரப்போவதாக ரஜினி அறிவிப்பு!)  இது  ஆன்மிக அரசியல் என்பது, மக்கள் மத்தியிலும் , அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.