வெள்ளி, 29 டிசம்பர், 2017

பிட்காயின்: நிதியமைச்சகம் எச்சரிக்கை December 29, 2017

Image

பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சிறு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிட்காய்ன் எனப்படும் விர்ச்சுவல் பணத்தின் பயன்பாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த பணத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என்றும், இதற்கு ஈடான சொத்துக்களும் இல்லை என்றும் 
தெரிவித்துள்ள நிதி அமைச்சகம், அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த பணப்புழக்கம் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய பிட்காயினில் முதலீடு செய்வது மிகப் பெரிய ஆபத்து என கூறியுள்ள நிதி அமைச்சகம், எனவே, முதலீட்டாளர்கள் யாரும் இதில் முதலீடு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 

Related Posts:

  • மகிமை மிக்க நுங்கு! ‪#‎நுங்கு‬ கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன. … Read More
  • காசு இல்லாத மக்களின் கவனதிற்கு ......... உண்மை இரண்டு நிமிடம் படியுங்கள் கத்தி படத்தை 200 ருபாய் கொடுத்து பார்க்கும் மகராசனுங்கலே இந்த மருத்துவ கொளையர்களை பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுங்க… Read More
  • மீண்டு(ம்) வருமா மழை நீர் சேகரிப்புத் திட்டம் மனிதனால் இறக்குமதி செய்ய முடியாத ஒரே பொருள் மழை நீர். உணவு உயிர் கொடுக்கிறது. உணவுக்கே உயிர் கொடுப்பது மழை நீர் மட்டுமே. உலகிலேயே மழை… Read More
  • சிகரெட் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்:- 1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது. 2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது … Read More