வியாழன், 28 டிசம்பர், 2017

​நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பில் சிறந்தது சென்னை நகரம்: புள்ளிவிவரத்தில் தகவல் December 27, 2017

Image

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. 

நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. 

இதில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் 544 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சம் பெண்களில் 15 பேருக்கு மட்டுமே பாதிப்பு இருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் மும்பை 2வது இடத்திலும், கொல்கத்தா மற்றும் பெங்களூரு முறையே 3 மற்றும் 5வது இடத்திலும் உள்ளன. 

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகராமாக டெல்லி உள்ளதாக குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.