வியாழன், 21 டிசம்பர், 2017

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள்! December 21, 2017

Image


உத்தரபிரதேச மாநிலம் பனராஸ் இந்து பல்கலைக்கழக மாணவ பேரவைத் தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சக மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

வாரணாசியில் ஐஐடி மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக மாணவர் தலைவர் அசுதோஷ் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி நடத்த இடையூறாக இருந்ததால், வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

இந்நிலையில் அசுதோஷ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய மாணவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் பனராஸ் இந்து பல்கலைக்கழக பகுதியில் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.