வெள்ளி, 29 டிசம்பர், 2017

​கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவி! December 29, 2017

Image

வந்தவாசியில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் கலைத்திருவிழாவில் 5-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள் அபிநயா, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியான கிழக்கு பாடசாலையில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். 

அருகில் உள்ள மற்றொரு பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழு நடனமாடிக்கொண்டிருந்தபோது அபிநயா மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

இதற்கு நீதி கேட்டு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சி.பி.எம் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் தொடக்கிவைத்துப் பேசினார். 
அப்போது, உயிரிழந்த மாணவி அபிநயாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.