வியாழன், 28 டிசம்பர், 2017

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் விதிமீறல்! December 27, 2017

Image


கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கியில் கடன் பெற்று அணுமின் நிலையம் உரிய நேரத்தில் அமைக்கப்படாததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 1, 2 வது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் 449 கோடி ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.