வெள்ளி, 30 மார்ச், 2018

​தேர்தல் அதிகாரியை காணவில்லை என திமுக புகார்..! March 30, 2018

Image

கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் திமுகவினர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், திமுகவை சேர்ந்த 11 பேர் கடந்த 26ம் தேதி நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு அளித்ததாகவும், அதற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வேட்பாளர் பட்டியலை ஒட்டவில்லை என்றும், தேர்தல் அதிகாரியையும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் பாலிநாயனப் பள்ளி, எமக்கல் நத்தம் கிராமங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகளை காணவில்லை என பருகூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.