ஞாயிறு, 18 மார்ச், 2018

திராவிட நாடு விவகாரம் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு! March 18, 2018

Image


இமயமலையில் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அதன் ஒரு கட்டமாக உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற துவாரகா புனித தலத்திற்கு வந்தார். 

அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், ஆசிரமங்களுக்குச் சென்று சாமியார்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஆன்மீக யாத்திரை மேற்கொள்ள துவாரகா மிகச் சிறந்த இடம் என்று தெரிவித்தார்.

மேலும், இங்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள், கடந்த முறை தாம் வந்தபோது இருந்ததைவிட, மிகவும் மேம்பட்டு இருப்பதாக ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார்.

முற்காலத்தில் சித்தர்கள் தவம் செய்த இடம் இது என்றும், ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஆன்மீக யாத்திரையிலும் தன்னை பின் தொடர்ந்து ஏன் வருகிறீர்கள் என செய்தியாளர்களிடம் கடிந்துகொண்ட ரஜினி, திராவிட நாடு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார்.