வியாழன், 22 மார்ச், 2018

விசைத்தறி தொழிலாளர்கள் 7-ஆவது நாளாக வேலை நிறுத்தம்! March 22, 2018

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 75% ஊதிய உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 7-ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டுவருகிறது.

2016-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்ததால் 75 சதவீத ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இதுவரை 1,40,00,000 ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Image