செவ்வாய், 27 மார்ச், 2018

வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...

For those cribbing that not enough is being done against karunya University here is your chance to contribute too.. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...

Image may contain: 1 person, standing, outdoor and nature
============================================
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோக மையத்தின் யானைகளின் வாழ்விடங்களை பாதிக்கின்ற கட்டிடங்களை எதிர்த்தும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44.3 ஏக்கர் நில அபகரிப்புக்கு எதிராகவும் மிக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில், காருன்யா பல்கலை கழகம் அதன் சட்ட விரோத கட்டுமானங்கள் மீது, ஏற்கனவே இருக்கும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கை மதிக்காமலும் தொடர்ந்து வருவாய கோட்டச்சியர் அவர்கள் உத்திரவை மதிக்காமலும் வல்லத்து ஓடையை சிதைத்து தனது கான்கிரட் மதில்களை எழுப்பி வருகிறது. இதன மூலம் பழங்குடி மக்கள் பல ஏக்கர் மேய்ச்சல் நிலங்களை இழப்பதுடன் யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் சிக்கி போராடும் சூழல் இருக்கிறது. காருன்யா பல்கலைகழகத்தின் இந்த போக்கை தடுத்த நிறுத்த வேண்டியது அவசியமாகும். எனவே காரூன்யா கல்வி நிறுவனங்களின் மீது சென்னை உயர் நீதி மன்றத்தில நடக்கும் வழக்கில் இனைத்துக் கொள்ள வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே இருக்கும் இந்த வழக்கிற்கும் புதிதாக தொடரப்படும் வழக்கிற்கும் நிதி தேவைப்படுகிறது. மிகப்பெரிய கார்பரே ஆண்மிக கல்வி நிறுவனங்களை எதிர்ப்பதற்கு தங்கள் ஆதரவும் தேவைப்படுகிறது.
எனவே தற்போது ரூபாய்- 75,000 மட்டும் வழக்கு செலவுகளுக்காக தேவை வங்கி கணக்கு விபரம்/
" Vellingiri Hill Tribal Protection Society,
Account Number== 1032101043986, savings bank account
Canara Bank, Alandurai, Coimbatore-641101,
IFSC CODE : CNRB0001032. "
(வெள்ளியங்கிரி சங்கத்தினரின் கோரிக்கையின் பேரில் பதிவு செய்யப்படுகிறது.நிதி அளிக்கும் நண்பர்களின் விபரம் வெளியிடப்படும்.)
Contact No -9500870572