வெள்ளி, 30 மார்ச், 2018

முபாஹலா அழைப் -அல்தாஃபி Vs TNTJ


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்தாஃபி இன்று 29.03.18 வியாழக்கிழமை
கீழ்கண்ட மின்னஞ்சலை தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
அவரது மெயிலும்,
அதற்கான ஜமாஅத்தின் பதிலும் கீழே வெளியிடப்பட்டுள்ளது.
அல்தாஃபி மெயில்:
அஸ்ஸலாமு அலைக்கும்
என் மீது நீங்கள்கூறிவரும்அவதூறுகளுக்கு 27.3.18
அன்று முபாஹலாசெய்ய வருமாறுஉங்களை
நான்அழைத்திருந்தேன்.
அதற்கு நீங்கள்வரவில்லை.
அதன் பிறகு நீங்கள்எனக்கு விடுத்தமுபாஹலா அழைப்பைநான் ஏற்றுக்கொண்டேன்.
ஏப்ரல் 1 ஆம் தேதி இதை நடத்திக் கொள்ளலாம்என இரு தரப்பும் ஒத்துக்கொண்டோம்.
அதற்கு தேவையானஏற்பாடுகளைச்செய்யவும்முபாஹலாவின் வாசகம்உள்ளிட்ட அனைத்துவிஷயங்களையும்பேசிக் கொள்ளவும் இரண்டு அல்லது மூன்றுபேரையும் அவர்களின்தொடர்பு எண்களையும்வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனது தொடர்புக்கு : 8667375739அப்துல்லாஹ்
இப்படிக்கு
P.M அல்தாஃபி
----------------
மேற்கண்ட மெயிலுக்கு நமது ஜமாஅத்தின் பதில்:
அனைத்துக்கும் முபாஹலா செய்யும் அழைப்பை நீங்கள் 28.3.2018 அன்று விட்டீர்கள்.
அதே நாளில் அந்த அறைகூவலை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.
இனி நமக்கிடையே எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை; நேரடி முபாஹலா மட்டுமே என்று அறிவித்திருந்தோம்.
உங்கள் மீது நாங்கள் சுமத்தும் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ஒவ்வொன்றாகக் கூறி நாங்கள் முபாஹலா செய்வோம்.
அவற்றை மறுத்து நீங்கள் முபாஹலா செய்ய வேண்டும்.
பின்னர் எங்கள் மீது நீங்கள் சுமத்தும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒவ்வொன்றாகக் கூறி நீங்கள் முபாஹலா செய்யுங்கள்.
அவற்றை மறுத்து நாங்கள் முபாஹலா செய்வோம்.
இதில் பேச்சு வார்த்தைக்கு எந்தத் தேவையுமில்லை, எல்லாம் முடிந்து விட்டது.
27.3.2018 அன்று ரவி மினி மஹாலில் இருந்து நீங்கள் நேரலை செய்த போது என்னென்ன ஏற்பாடுகள் செய்திருந்தீர்களோ அதுவே போதுமானது.
நீங்கள் அழைத்த அதே ரவி மினி மஹாலில் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 10.30மணிக்கு சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்....
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்