செவ்வாய், 27 மார்ச், 2018

குறுகிய சாலை

இச்சாலை மிகவும் குறுகிய சாலை.இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம்.காரணம் அச்சாலையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் இரும்பு சாமான்கள் விற்கும் கடை உரிமையாளர் முதல் தொழிலாளிகள் வரை சாலை ஓரத்தில் வெங்காய மூட்டைகளை அடுக்கி வைப்பார்கள்.சாலை ஓரத்திலே வெங்காயத்தை கொட்டி பரப்பி விடுவார்கள்.இரும்பு கடை வைத்திருபவர்கள் அதற்கு மேல் சாலை நடுவே வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏத்துவார்கள்.அதும் காலை நேரத்தில் தான்,வருகின்ற லோடு சரக்குகளையும் இறக்குவர்கள்.
இப்படி தன் சுய லாபத்திற்காக, மக்களை பற்றி சிந்திக்காமலும் அவர்கள் செய்யும் செயல்பாடுகள் ஒரு விதமான கடும் எரிச்சலை உண்டாக்கும்.
ஆக இது போன்ற போக்குவரத்து நெரிசலை தடுக்க, விதிமுறைகளுக்கு உட்பட்ட படி கடை நடத்த கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.