திங்கள், 2 ஏப்ரல், 2018

ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது! April 1, 2018

Image

ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

எஸ் பேண்ட் வசதியுடன் கூடிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட் 6ஏ செயற்கைகோளை, கடந்த வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து, ஜிஎஸ்எல்வி எஃப்8  ராக்கெட் மூலம் விண்ணில் இஸ்ரோ செலுத்தியது. 

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், ஜிசாட் 6 ஏ செயற்கைகோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது. 

எனினும், இரண்டாம் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளுக்கும் இஸ்ரோவுக்கும் இடையே தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன், விஞ்ஞானிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

மேலும், செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பு துண்டிப்பை இஸ்ரோ உறுதிப்படுத்திய நிலையில், அதனை சீரமைக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts:

  • சாவு மணி அடிக்க வேண்டும் கண் இமைக்கும் நேரத்தில் கருப்பு முருகானந்தத்தால் கலவர பூமியாக்கப்பட்ட மல்லிப்பட்டிணம்....?கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வலையில் மீன் பட்டால் தான் அன… Read More
  • மறந்து விடாதீர்கள், மோடிக்கு குழி பறிக்கும் சங்பரிவாரம்...?ஹிந்துத்துவாவின் மோடியை மதசார்பற்ற நாட்டின் ஆட்சியில் அமரச் செய்வதற்காக ஒவ்வொரு நாட்களாக விரலை விட்டு எண்ணிக்க… Read More
  • Summer Camp மு பட்டி - TNTJ நடத்தும் கோடைகால சிறப்பு மார்க்க பயிற்ச்சி முகாம் . பயிற்ச்சி தொடங்கும் நாள் 19/04/2014, மணி 10 முதல் 2 வரை. தொடர்புக்கு 994202586… Read More
  • அதிமுகவுடனான ஆதரவு வாபஸ்- த.த.ஜ. அதிரடி முடிவு...! ஏகஇறைவனின் திருப்பெயரால்...சரியான நேரத்தில் சரியான முடிவு அல்லாஹூஅக்பர்.த.த.ஜ.வின் தன்னலமற்ற மக்கள் சேவையையும், அதன் நேர்மையையும் இந்த முடிவு பறைசாற்… Read More
  • MKpatti- Library Inner View of Library ...Near to Senkulam Bus Top. … Read More