வியாழன், 29 அக்டோபர், 2020

கொரோனா பரவலை தடுக்க உதவியவை: ஒரு ஆய்வு

 பேண்டமிக் காலகட்டத்தையொட்டி பல்வேறு நாடுகளில் பள்ளி மற்றும் அலுவலக மூடல், பொது நிகழ்வுகள் மீதான தடை, பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அதிகப்படியான கோவிட் -19 பரவுதலைத் தடுக்க உதவியது. ஆனாலும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எந்தவொரு தடைகளையும் விட மிகவும் பயனுள்ளதாக இருந்தன என ‘தி லான்செட் தொற்று நோய்கள்’ வெளியிடப்பட்ட ஓர் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 131 நாடுகளிலிருந்து டேட்டாவை எடுத்து, அவற்றின் செயல்திறனுக்காக பல்வேறு மருந்து அல்லாத தலையீடுகளை (non-pharmaceutical interventions (NPIs)) தரவரிசைப்படுத்தினர்.

அவர்கள் அதை எவ்வாறு செய்தனர்?

இந்த கணக்கீடுகள் R எண்ணை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது, பாதிக்கப்பட்ட நபர்களின் மக்கள் தொகைக் குழுவிற்குள் வைரஸ் பரவக்கூடிய ஆரோக்கியமான நபர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

இந்த தலையீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உயர்த்தப்படும்போது R எண்ணை மதிப்பிட்டு, பரிமாற்றத்தின் தனி மற்றும் ஒருங்கிணைந்த தலையீடுகளின் விளைவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். “எங்களுடைய இந்த ஆய்வுதான் முதன்முதலில் NPI-களின் வரம்பை மாற்றுவதற்கும் SARS-CoV-2-ஐ பரப்புவதற்கும் இடையிலான தற்காலிக தொடர்பை மதிப்பிட்டு, R எண் மூலம் அளவிடப்படுகிறது. இந்த தரவு அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

R-ன் தினசரி மதிப்பீடுகள் ஜனவரி முதல் ஜூலை வரை நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காலவரிசை உருவாக்கப்பட்டு, தனிப்பட்ட கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது(இதில் எந்த கட்டத்திலும், அனைத்து நடவடிக்கைகளும் மாறாமல் இருந்தன).

சிக்கலான மாடலிங் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள கட்டுப்பாடுகளை R மாற்றங்களுடன் இணைத்தனர்.

School office closing Corona Lockdown Restrictions Effect Tamil NewsCorona Lockdown Restrictions Effect

சிங்கிள் vs பேக்கேஜ்

24% : பொது நிகழ்வுகள் மீதான தடைகள், மிக உயர்ந்த குறைப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது. 28 நாட்களுக்குள் R எண் 24% குறைந்திருக்கிறது. பிற நடவடிக்கைகள் அவற்றின் மீது குறிப்பிடத்தக்க விளைவைக் காணவில்லை.

29% : நான்கு “தொகுப்புகளை” மாதிரியாகக் கொண்டு, இந்த குழு பல நடவடிக்கைகளை இணைத்தது. இவற்றில், பொது நிகழ்வுகளுக்குத் தடை, 10-க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்குத் தடை என மிகக் குறைவான கட்டுப்பாடு, 28 ஆம் நாளில் R எண்ணை 29% குறைத்தது.

52% : பள்ளி மற்றும் பணியிடங்களை மூடுவது, பொது நிகழ்வுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டங்களுக்குத் தடை, இயக்கத்தின் வரம்புகள் மற்றும் வீட்டில் தங்க வேண்டிய தேவை ஆகியவற்றால் ஏற்பட்ட குறைப்பு.