புதன், 28 அக்டோபர், 2020

மதுரையில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம்... விசிகவினர் 42 பேர் கைது...

 மதுரையில், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 

பூத் கமிட்டி படிவம் வாங்குவதற்காக பாஜக நிர்வாகிகள் 7 பேர்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.  அப்போது, அங்கு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.  அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமிருந்து, பாஜக நிர்வாகிகளை மீட்டனர். இதில் தங்கம் எனவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்தனர், தாக்குதலுக்கு உள்ளான பாஜக நிர்வாகி தங்கத்தின் புகாரை அடுத்து 42 பேர் மீதும் கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், வாகனத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டனர், இதில் 14 பெண்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் 28 ஆண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.