புதன், 28 அக்டோபர், 2020

மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

Image

மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை பாஜகவினர் பெரிது படுத்துவதாகவும் இது சாதாரண நடைமுறைதான் என்றும் தெரிவித்தார்.  

திருமாவளவன் தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை என்று குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம், மனுசாஸ்திரம் நூலில் கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார். மனுதர்மம் இந்திய அரசியல் சாசனத்தை விட உயர்ந்ததா என பாஜகவினர் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், திருமாவளவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஒரு கருத்தரங்கில் பேசியதை திருத்தி போலியான போராட்டங்களை பாஜகவினர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்

Related Posts:

  • வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!! வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின்… Read More
  • Keeladi , Sivagangai district,Vaigai civilization 3 rd BCE excavations by professor Venkatachalam, archaeologist … Read More
  • No visa 55+ countries List of Countries Indian passport holders can visit without Visa Recent surveys indicate that US and UK have the most powerful passports in th… Read More
  • புறா வளர்ப்பு புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப… Read More
  • அசம்பாவிதம் நேற்று திண்டுக்கல்லில் ஒரு அசம்பாவிதம் இதனாள் ஓர் உயிர் பிறிக்கப்பட்டது! அதனால் இன்று தான் முறைப்படி மனுகுடுக்கப்பட்டது! மனுவை பார்வையிட்ட அதி… Read More