செவ்வாய், 27 அக்டோபர், 2020

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று நடைபெறுகிறது.

 மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று நடைபெறுகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதமான 547 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 15 பி.டி.எஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படுகிறது. 

இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. நீட் தேர்வில் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு தகுதிபெற்ற மாணவ, மாணவிகள் ஆன்லைனில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.