சனி, 7 ஜனவரி, 2023

ஈஷா யோகா மையம் சென்ற சுபஸ்ரீ மர்ம மரணம்; நீதி விசாரணை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

 

7 1 2023


ஈஷா யோகா மையம் சென்ற சுபஸ்ரீ மர்ம மரணம்; நீதி விசாரணை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையத்தில் தொடர் மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும் அதற்காக நீதி விசாரணை நடத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்மையில் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறிய நிலையில் செம்மேடு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுபஸ்ரீயின் மரணத்தில் காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் ஈஷா யோகாவில் தொடர் மர்ம மரணங்கள் நிகழ்வுதாகவும் அதற்கான நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தி: பி. ரஹ்மான்

source https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-protests-subhasree-death-isha-yoga-center-571973/