வெள்ளி, 9 ஜூன், 2023

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு : வாய்க்கால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடுகிறார்

 9 6 23

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் 5.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 8.90 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் ஜூன் 16-ம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணை மட்டுமின்றி அது அந்த தண்ணீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றடைந்தார்.

இதனைதொடர்ந்து இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிடும் அவர், பின்னர் லால்குடி அருகே உள்ள பூழையாற்றில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார். அதன் பின்னர் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர், நாளை மறுதினம் ((11-ந்தேதி)) சேலம் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

 


source https://news7tamil.live/chief-minister-m-k-stalin-today-inspects-the-canal-digging-works-in-delta-districts.html

Related Posts: